follow the truth

follow the truth

July, 5, 2025
Homeஉள்நாடுதிருகோணமலை எண்ணெய் தாங்கி குறித்த ஒப்பந்தம் பாராளுமன்றில் முன்வைப்பு

திருகோணமலை எண்ணெய் தாங்கி குறித்த ஒப்பந்தம் பாராளுமன்றில் முன்வைப்பு

Published on

திருகோணமலை எண்ணெய் தாங்கி அபிவிருத்தி தொடர்பான ஒப்பந்தம் இன்று  பாராளுமன்றில்  முன்வைக்கப்பட்டுள்ளது.

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவினால் குறித்த ஒப்பந்தம் இன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை எண்ணெய் தாங்கி தொகுதியை அபிவிருத்தி செய்வதற்காக காணி ஆணையாளர் நாயகம், திறைசேரியின் செயலாளர், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், லங்கா ஐஓசி மற்றும் Trinco Petroleum Terminal தனியார் நிறுவனம் ஆகியன குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.

இதற்கமைய, 99 எண்ணெய் தாங்கிகளில் 85 எண்ணெய் தாங்கிகள் இலங்கைக்கும் ஏனைய 14 எண்ணெய் தாங்கிகள் இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, ஒப்பந்தத்தை இரத்துச் செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

6 மாதங்களில் 120.5 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டிய மதுவரித் திணைக்களம்

மதுவரித் திணைக்களம் 6 மாதங்களில் 120.5 பில்லியன் ரூபாய்கள் குறிப்பிடத்தக்க வருமானத்தை ஈட்டியுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கை மதுவரித்...

கொழும்பு – அவிசாவளை வீதியில் மாற்று வழியை பயன்படுத்துமாறு அறிவித்தல்

கொழும்பு - அவிசாவளை லோலெவல் வீதியில் இன்று (04) மாலை 4 மணி முதல் சுமார் 3 மணி...

தேசிய ஆராய்ச்சி, அபிவிருத்திக் கொள்கை குறித்து தெளிவுபடுத்தும் நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவு

ஜனாதிபதி அலுவலகம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு என்பன இணைந்து ஏற்பாடு செய்த தேசிய ஆராய்ச்சி மற்றும்...