முன்னாள் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டால் அவரது தொலைபேசியில் உள்ள அனைத்து ஒலிப்பதிவுகளையும் பகிரங்கப்படுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
மேலும் ,ரஞ்சன் ராமநாயக்க நீதித்துறைக்கு எதிராக வெளியிட்ட கருத்துக்களின் பாரதூரத்தை நாட்டு மக்கள் அறிய வேண்டும் எனவும் உண்மையைக் கூறியதற்காக ரஞ்சன் ராமநாயக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.