follow the truth

follow the truth

July, 5, 2025
Homeஉள்நாடுக.பொ.த. உயர் தரப் பரீட்சையில் ஆள்மாறாட்டம் - தேரர் ஒருவர் கைது!

க.பொ.த. உயர் தரப் பரீட்சையில் ஆள்மாறாட்டம் – தேரர் ஒருவர் கைது!

Published on

கொக்மாதுவ, வெலிகம பிரதேசத்தில் தேரர் ஒருவருக்காக போலி தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி, 2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர் தரப் பரீட்சை எழுத வந்திருந்ததாக தெரிவிக்கப்படும், இன்னுமொரு தேரர் புத்தளம் சாந்த மரியா தமிழ் வித்தியாலயத்தியத்திலுள்ள பரீட்சை நிலையத்தில் வைத்து சந்தேகத்தின் அடிப்படையில் இன்று கைதுசெய்யப்பட்டதாக புத்தளம் பொலிஸாா் தெரிவித்துள்ளனா்.

புத்தளம் சாந்த மரியா தமிழ் வித்தியத்திலுள்ள பரீட்சை நிலையத்தில் நான்காவது நாளாக க.பொ.த. உளர் தரப் பரீட்சை சிங்கள பாடத்துக்காக இரண்டாம் பிரிவு வினா தாளுக்க விடை எழுதுவதற்காக வருகை தந்திருந்த குறித்த தேரர் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகத்தில் அடிப்படையில் அவர் பரீட்சை நிலைய தலைவரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளாா்.

அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த தேரர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளாா். மஹஹீல்ல இசுருபுர பொலிஹத்த பிரதேசத்திலுள்ள விகாரையின் தேரர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளாா். இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள தேரரை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதுடன் புத்தளம் பொலிஸாா் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனா்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

6 மாதங்களில் 120.5 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டிய மதுவரித் திணைக்களம்

மதுவரித் திணைக்களம் 6 மாதங்களில் 120.5 பில்லியன் ரூபாய்கள் குறிப்பிடத்தக்க வருமானத்தை ஈட்டியுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கை மதுவரித்...

கொழும்பு – அவிசாவளை வீதியில் மாற்று வழியை பயன்படுத்துமாறு அறிவித்தல்

கொழும்பு - அவிசாவளை லோலெவல் வீதியில் இன்று (04) மாலை 4 மணி முதல் சுமார் 3 மணி...

தேசிய ஆராய்ச்சி, அபிவிருத்திக் கொள்கை குறித்து தெளிவுபடுத்தும் நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவு

ஜனாதிபதி அலுவலகம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு என்பன இணைந்து ஏற்பாடு செய்த தேசிய ஆராய்ச்சி மற்றும்...