follow the truth

follow the truth

July, 5, 2025
Homeஉள்நாடுகைவிடப்பட்ட மைதானத்தினால் 10 கோடி ரூபா நட்டம்

கைவிடப்பட்ட மைதானத்தினால் 10 கோடி ரூபா நட்டம்

Published on

நுவரெலியாவில் விளையாட்டு மைதானமொன்றை நிர்மாணிக்கும் நடவடிக்கைகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டமையின் ஊடாக, 10 கோடி ரூபாவிற்கு அதிக தொகை நட்டம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விளையாட்டு மைதானம் 2019ம் ஆண்டு திறப்பதற்கு திட்டமிடப்பட்ட நிலையில், 2020ம் ஆண்டு மைதானத்தின் நிர்மாணப் பணிகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளன.

நுவரெலியாவில் 34 ஹெக்டயர் நிலப் பரப்பில் இந்த மைதானத்தை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டது.

மெய்வல்லுநர் போட்டிகள், கபடி, கூடைபந்து, ஹொக்கி, உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுக்களை நடத்தும் வகையில் இந்த விளையாட்டு மைதான தொகுதி நிர்மாணிக்க திட்டமிடப்பட்டது.

உள்ளக மற்றும் வெளியக போட்டிகளையும் இந்த விளையாட்டு மைதான தொகுதியில் நடத்த திட்டமிடப்பட்டது.

இந்த திட்டத்திற்கு 75,528,700 யுரோ நிதி செலவிட தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிதித் தொகையில் 70 சதவீதம் பிரித்தானிய நிதி நிறுவனத்தின் ஊடாகவும், எஞ்சிய தொகையை மக்கள் வங்கி ஊடாகவும் கடன் அடிப்படையில் வழங்க திட்டமிடப்பட்டது.

இவ்வாறு நிர்மாணிக்கப்படவிருந்த மைதான கட்டிடத் தொகுதியின் நிர்மாணப் பணிகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டமையின் ஊடாக, பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

6 மாதங்களில் 120.5 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டிய மதுவரித் திணைக்களம்

மதுவரித் திணைக்களம் 6 மாதங்களில் 120.5 பில்லியன் ரூபாய்கள் குறிப்பிடத்தக்க வருமானத்தை ஈட்டியுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கை மதுவரித்...

கொழும்பு – அவிசாவளை வீதியில் மாற்று வழியை பயன்படுத்துமாறு அறிவித்தல்

கொழும்பு - அவிசாவளை லோலெவல் வீதியில் இன்று (04) மாலை 4 மணி முதல் சுமார் 3 மணி...

தேசிய ஆராய்ச்சி, அபிவிருத்திக் கொள்கை குறித்து தெளிவுபடுத்தும் நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவு

ஜனாதிபதி அலுவலகம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு என்பன இணைந்து ஏற்பாடு செய்த தேசிய ஆராய்ச்சி மற்றும்...