follow the truth

follow the truth

May, 14, 2025
Homeஉள்நாடுசஹ்ரானின் மனைவி மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

சஹ்ரானின் மனைவி மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Published on

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள, சஹ்ரான் ஹாஷிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியா தொடர்பான வழக்கு விசாரணை மே மாதம் 27 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கல்முனை மேல் நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று குண்டுத்தாக்குதல் நடத்திய சஹ்ரான் ஹஷிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியா பகிரங்க நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

சந்தேகநபரிடம் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் சிங்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளமையால், தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பு அவசியம் என மன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, வழக்கு விசாரணையை ஒத்திவைத்து கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கனடாவில் தவறான எண்ணக்கருவில் நிர்மாணிக்கப்படும் நினைவுச்சின்னம் குறித்து கண்டனம்

இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, இனப்படுகொலை நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டானது, தேசிய அல்லது சர்வதேச அளவில்...

லிட்ரோ மேன்பவர் ஊழியர்கள் வேலைநிறுத்தம்

முத்துராஜவெல லிட்ரோ எரிவாயு முனையத்தில் சுமார் 250 மேன்பவர் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தமது சம்பளத்தை உயர்த்தவில்லை என்றும், அரசாங்கம்...

கொத்மலை பஸ் விபத்து – உயிரிழந்தவர்களுக்கான நிதி பிரதேச செயலகங்களுக்கு அனுப்பிவைப்பு

கொத்மலை, கெரண்டியெல்ல பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் ஜனாதிபதி...