follow the truth

follow the truth

July, 5, 2025
Homeஉள்நாடுGas இன்மையால் 1000 இற்கும் மேற்பட்ட பேக்கரிகளுக்கு பூட்டு! (VIDEO)

Gas இன்மையால் 1000 இற்கும் மேற்பட்ட பேக்கரிகளுக்கு பூட்டு! (VIDEO)

Published on

எரிவாயு விநியோகத் தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் உள்ள பேக்கரிகள் மூடப்படுகின்றன. உக்ரைன் ரஷ்யா போர் சூழல் மற்றும் சர்வதேச எரிவாயு விநியோகச் சங்கிலியின் சரிவு காரணமாக உலக சந்தையில் எரிவாயு விலை கணிசமான அளவு அதிகரித்து வருகிறது. இவ்வாறான சூழ்நிலையில் நாட்டில் எரிவாயுவிற்கான தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக பேக்கரிகள்இ உணவகங்களின் செயற்பாடுகளை தொடர்ந்தும் மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது. இதனால் மக்கள் அத்தியவசிய உணவுகள் இன்மை காரணமாக பாரிய சிக்கலுக்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும் நாட்டில் அந்நிய செலாவணி கையிருப்பு 2.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையில் வீழ்ச்சியடைந்துள்ளது. இது நாட்டின் அந்நிய செலாவணியின் கையிருப்பில் 70 வீத வீழ்ச்சி நிலையாகும். இதனால் நாடு பாரிய நிதி நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது. இதற்கு மத்தியில் மக்களுக்கு தேவையான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் முயற்சிகளை அரசு மேற்கொண்டுவருகின்றது.

இருப்பினும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேக்கரிகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

6 மாதங்களில் 120.5 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டிய மதுவரித் திணைக்களம்

மதுவரித் திணைக்களம் 6 மாதங்களில் 120.5 பில்லியன் ரூபாய்கள் குறிப்பிடத்தக்க வருமானத்தை ஈட்டியுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கை மதுவரித்...

கொழும்பு – அவிசாவளை வீதியில் மாற்று வழியை பயன்படுத்துமாறு அறிவித்தல்

கொழும்பு - அவிசாவளை லோலெவல் வீதியில் இன்று (04) மாலை 4 மணி முதல் சுமார் 3 மணி...

தேசிய ஆராய்ச்சி, அபிவிருத்திக் கொள்கை குறித்து தெளிவுபடுத்தும் நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவு

ஜனாதிபதி அலுவலகம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு என்பன இணைந்து ஏற்பாடு செய்த தேசிய ஆராய்ச்சி மற்றும்...