follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடுஆர்ப்பாட்டக்காரர்களின் உடமைகள்,வாகனங்களை அகற்ற கோட்டை நீதிமன்றம் உத்தரவு

ஆர்ப்பாட்டக்காரர்களின் உடமைகள்,வாகனங்களை அகற்ற கோட்டை நீதிமன்றம் உத்தரவு

Published on

கொள்ளுப்பிட்டியில் உள்ள அலரிமாளிகைக்கு அருகில் உள்ள ஆர்ப்பாட்டக்காரர்களின் உடமைகள் மற்றும் வாகனங்கள் அனைத்தையும் அகற்றுமாறு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இவை நடைபாதையை பயன்படுத்தும் பாதசாரிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்துவதுடன், பொதுமக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்துகின்றன என்ற அடிப்படையில் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ஆனால், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்காத வகையில் அமைதிப் போராட்டம் நடத்துவதைத் தடை செய்யவில்லை என்று நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, அலரிமாளிகைக்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் இலங்கை உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள்  மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், பிரதமர் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக, போராட்டம் நடைபெறும் இடத்துடன் நடைபாதையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அகற்றக் கோரி உத்தரவிட வேண்டும்.

மேலும், போராட்டக்காரர்களுக்கு இடையூறாக அமைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கிகள் மற்றும் சாலைத் தடுப்புகளைப் பயன்படுத்துவதற்கு எதிராகவும் உத்தரவிட வேண்டும். எனக் குறித்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வைத்தியர் மஹேஷியின் மகள் விளக்கமறியலில்

நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் மருத்துவர் மஹேஷி விஜேரத்னவின் மகள் எதிர்வரும் ஜூலை 9 ஆம் திகதி வரை...

“வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான சட்ட உதவி” – அரச அதிகாரிகளுக்கான விளக்கவுரை

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சட்டப் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட “வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான சட்ட உதவி” தொடர்பாக, குருநாகல்...

தேங்காய் விலையில் வீழ்ச்சி

சந்தையில் தேங்காயின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த சில மாதங்களாக, 220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட...