follow the truth

follow the truth

May, 1, 2025
Homeஉள்நாடுஇரு டோஸ்களையும் பெற்றவர்களின் எண்ணிக்கை 7 மில்லியனை கடந்தது

இரு டோஸ்களையும் பெற்றவர்களின் எண்ணிக்கை 7 மில்லியனை கடந்தது

Published on

நாட்டில் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றவர்களின் எண்ணிக்கை 7 மில்லியனை கடந்துள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

தமது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் இதனை பதிவிட்டுள்ளார்.

இதன்படி, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடுப்பகுதிக்குள் நாட்டின் மொத்த சனத்தொகையில் 60 சதவீதமானோருக்கு தடுப்பூசியை செலுத்தும் இலக்கை அடைய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டில் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் நேற்றைய தினம் ஒரு இலட்சத்து 88 ஆயிரத்து 52 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதுடன், நாட்டில் இதுவரை 12,290,482 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

Image

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் திடீர் மரணம் குறித்து கல்வி அமைச்சின் நடவடிக்கை

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் திடீரென உயிரிழந்ததற்கான சூழ்நிலைகள் குறித்து முழுமையான விசாரணையை...

கல்ஹின்ன பள்ளிவாசல் தொடர்பான மேன் முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பினை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை

கல்ஹின்ன ஜும்ஆப் பள்ளிவாசல் தொடர்பாக மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வழங்கப்பட்ட...

அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டை பயன்படுத்தும் சேவை தாமதம்

அதிவேக நெடுஞ்சாலைகளில், வங்கி அட்டைகளைப் பயன்படுத்திக் கொடுப்பனவை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேலும் தாமதமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல்...