follow the truth

follow the truth

May, 11, 2025
Homeஉள்நாடுவிசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று

விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று

Published on

நாட்டின் எதிர்கால அரசியல் விவகாரங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக இன்று கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 13ஆம் திகதி ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாபாய ராஜபக்ஷ விலகியதன் பின்னர், புதிய ஜனாதிபதியை நியமிப்பது மற்றும் புதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக இங்கு கலந்துரையாடப்படவுள்ளது.

அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக இறுதி உடன்பாடுகள் எட்டப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் பிரதான அரசியல் கட்சிகளுக்கிடையில் இன்று விசேட கலந்துரையாடல்கள் பல நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதெவேளை, புதிய அரசாங்கம் அமைக்கப்படும் வரை சபாநாயகர் பதில் ஜனாதிபதியாக செயற்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டீ.டபிள்யூ.குணசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கோபா குழுவில் முன்னிலையான ரயில்வே திணைக்களம்

பல வருடங்களாக கணக்காய்வு அறிக்கைகளை முறையாக சமர்ப்பிக்க ரயில்வே திணைக்களம் தவறியுள்ள விடயம் கோபா குழுவின் முன்னிலையில் தெரியவந்தது. இதன்...

இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமையினால் உஷாராகும் வாகன இறக்குமதி

நான்கு வருடங்களுக்குப் பின்னர், இடைநிறுத்தப்பட்டிருந்த இறக்குமதி கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டமையினால் வாகன இறக்குமதி துறையினர் நன்மையடைந்து வருகின்றனர். இதற்கமைய தற்போது...

ஹஜ் யாத்திரை செல்லும் முதலாவது இலங்கை யாத்திரிகர்கள் குழு பயணம்

இம்முறை ஹஜ் யாத்திரை செல்லும் முதலாவது இலங்கை யாத்திரிகர்கள் குழு இன்றைய தினம் நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றது. அவர்களை யாத்திரைக்கு...