follow the truth

follow the truth

July, 8, 2025
Homeஉள்நாடு2ஆவது துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி

2ஆவது துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி

Published on

பலப்பிட்டிய வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (31) மாலை இடம்பெற்ற  துப்பாக்கிப் பிரயோகத்தில் 27 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் அம்பலாங்கொடை கலகொட பிரதேசத்தைச் சேர்ந்த நபரே உயிரழந்துள்ளார்.

ஐந்து வாரங்களுக்குள் அம்பலாங்கொடையில் இடம்பெற்ற ஐந்தாவது துப்பாக்கிச் சூடு இதுவெனவும், அந்த ஐந்து துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, நீர்கொழும்பு நீதிமன்றத்துக்கு அருகில், மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், இருவர் காயமடைந்து நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (31) மதியம் இடம்பெற்ற இச்சம்பவத்தில் காயமடைந்தோர், கட்டான தெமன்ஹந்திய பிரதேசத்தில் வசிக்கும் 40 மற்றும் 51 வயதுடையவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2030 இல் டிஜிட்டல் பொருளாதார இலக்குகளை அடைவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தை டிஜிட்டல் மயமாக்குவதற்கு ஜனாதிபதி பணிப்புரை

2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார மூலோபாய இலக்குகளை அடைவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தை (IRD) பலப்படுத்தல்...

மத்திய கலாசார நிதியத்தின் நடவடிக்கைகளை பரிசீலிக்க மூவரடங்கிய குழு நியமனம்

2017 தொடக்கம் 2020 வரையிலான காலப்பகுதியில் வணக்கஸ்த்தலங்கள் மற்றும் பல நடவடிக்கைகளுக்காக மத்திய கலாச்சார நிதியத்தின் மூலம் நிதியுதவிகள்...

உத்தேச கல்வி சீர்திருத்தங்களை யதார்த்தமாக்குவதற்கு நிறுவனக் கட்டமைப்பும் பலப்படுத்தப்பட வேண்டும்

உத்தேச கல்விச் சீர்திருத்தங்களை வெற்றிகரமாக செயற்படுத்துவதற்கு, முழு கல்வி முறையின் வசதிகளையும் மேம்படுத்தும் அதே வேளையில், நிறுவனக் கட்டமைப்பையும்...