follow the truth

follow the truth

May, 23, 2025
Homeஉள்நாடுகுழந்தைகளின் வளர்ச்சியை மதிப்பீடு செய்ய நடவடிக்கை!

குழந்தைகளின் வளர்ச்சியை மதிப்பீடு செய்ய நடவடிக்கை!

Published on

நாட்டில் போசாக்கு வேலைத்திட்டத்தை மிகவும் வலுவுள்ளதாக முன்னெடுக்கும் நோக்கில், ஒக்டோபர் மாதத்தில் இடம்பெற்றுள்ள போசாக்கு மாதத்தை முன்னிட்டு, முழு நாட்டையும் உள்ளடக்கிய 5 வயதுக்கு குறைந்த பிள்ளைகளின் எடை மற்றும் உயரம் ஆகிய இரண்டிற்கும் அமைவாக வளர்ச்சியை மதிப்பீடு செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று குடும்ப சுகாதார அலுவலகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற போசாக்கு மாதம் தொடர்பில் தெளிவுப்படுத்தும் விசேட ஊடக சந்திப்பில் இந்த விடயத்தை விசேட வைத்தியர் குறிப்பிட்டார்.

இம்முறை தேசிய போசாக்கு மாதத்தின் தொனிப்பொருள் ´குறைந்த செலவில் போசாக்கை பாதுகாப்போம். தெளிவை ஏற்படுத்திக் கொள்வோம். முன் மாதிரியாக செயற்படுவோம். உற்பத்தியை மேற்கொள்வோம் பகிர்ந்து கொள்வோம்´ என்பதாகும்.

விசேடமாக தற்பொழுது பிள்ளைகளின் போசாக்கு குறைபாடு தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக குறிப்பிட்ட அவர், 5 வயதுக்கு குறைவான பிள்ளைகளின் வளர்ச்சியை மதிப்பீடு செய்வது குறித்து அனைத்து மாவட்டத்திலும் உள்ள சுகாதார வைத்திய அலுவலக ஊழியர்களுக்கும் இது குறித்து தெளிவு படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அடுத்த மாதம் தமது பிரதேசத்தில் எடையை மதிப்பீடு செய்யும் நிலையத்திற்கு அல்லது குடும்ப சுகாதார சேவை அதிகாரியுடன் கலந்துரையாடி எடையை அளவீடு செய்யும் பிரதேசத்தில் சம்பந்தப்பட்ட நிலையத்திற்கு தமது பிள்ளைகளை அழைத்து சென்று வளர்ச்சி நிலையை அறிந்து கொள்வதற்கு பெற்றோர் ஆர்வம் காட்ட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கான ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளருடன் பிரதமர் சந்திப்பு.

இலங்கை அரசாங்கத்திற்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையிலான தொடர்ச்சியான கூட்டாண்மையை மேம்படுத்துவதற்காக, இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,...

தாதியர் சேவைக்காக 3147 புதிய தாதியர்கள் நாளை நியமனம்

நாட்டில் தாதியர் சேவையில் சேர்க்கப்பட்ட 3147 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் விழா, நாளை(24) சனிக்கிழமை காலை அலரி...

சமிந்த விஜேசிறி இராஜினாமா

பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி ஐக்கிய மக்கள் சக்தியின் பண்டாரவளை தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார். இது...