follow the truth

follow the truth

July, 22, 2025
Homeஉள்நாடுநாட்டிற்கு மேலுமொரு தொகை ஸ்புட்னிக்-V தடுப்பூசிகள் : கண்டி மாவட்ட மக்களுக்கு செலுத்த நடவடிக்கை

நாட்டிற்கு மேலுமொரு தொகை ஸ்புட்னிக்-V தடுப்பூசிகள் : கண்டி மாவட்ட மக்களுக்கு செலுத்த நடவடிக்கை

Published on

இலங்கைக்கு மேலும் 120,000 ஸ்புட்னிக்V தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

குறித்த தடுப்பூசிகள் இன்று  அதிகாலை கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதுடன், இவை இரண்டாம் தடுப்பூசியாக செலுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த ஸ்புட்னிக்V தடுப்பூசி தொகையை கண்டி மாவட்ட மக்களுக்கு இரண்டாம் தடுப்பூசியாக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஒளடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

குறித்த தடுப்பூசிகளை செலுத்தும் பணிகள் நாளை(20) மறுதினம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதற்கமைய முதலாவது தடுப்பூசியை பெற்றுக் கொண்ட அனைவருக்கும் முழுமையான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் நிறைவடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டி மாவட்டத்தில் 150,000 பேருக்கு ஸ்புட்னிக்V தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அவர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட 30,000 பேருக்கு இரண்டாவது தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை நீக்கும் சட்டமூலத்துக்கு அமைச்சரவை அனுமதி

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் சிறப்பு சலுகைகளை இரத்து செய்வதற்கான சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பாராளுமன்றில்...

நிட்டம்புவையில் பாரிய தீ விபத்து – பிரதான வீதியில் போக்குவரத்து நெரிசல்

நிட்டம்புவ நகரில் அமைந்துள்ள கட்டிடமொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொழும்பு நோக்கிய வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக...

இலங்கையர்களுக்கு கொரியாவில் 8 மாத வேலைவாய்ப்பு

கொரிய குடியரசின் E-08 வீசா வகையின் கீழ் இலங்கை தொழிலாளர்களை பருவகால வேளாண் பணிகளில் ஈடுபடுத்துவதற்கான ஒப்பந்தத்திற்கு இலங்கை...