follow the truth

follow the truth

July, 7, 2025
HomeTOP1கடன் மறுசீரமைப்புக்கு சீனா உடன்பாடில்லை

கடன் மறுசீரமைப்புக்கு சீனா உடன்பாடில்லை

Published on

இலங்கைக்கு கடனை செலுத்துவதற்கு பத்து வருட கால அவகாசம் வழங்கவும் மேலும் பதினைந்து வருடங்களுக்கு கடன் மறுசீரமைப்பை வழங்கவும் பரிஸ் யூனியன் நாடுகள் இணங்கியுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால், இலங்கையின் பிரதான கடனாளியான சீனா, கடன் மறுசீரமைப்புக்கு இன்னும் உடன்படவில்லை.

எனவே சர்வதேச நாணய நிதியத்தினால் இவ்வருடம் டிசெம்பர் மாதம் வழங்குவதற்கு ஒப்புக்கொள்ளப்பட்ட 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் நிவாரணம் அப்போது கிடைக்காது என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

அவ்வாறாயின், எதிர்வரும் மார்ச் மாதம் மீண்டும் கடன் நிவாரணம் கிடைக்கப்பெறும் எனவும், இவ்வாறான நிலையில் இலங்கைக்கு யார் இடைப்பட்ட காலத்தில் கடன் வழங்கத் தயாராக இருக்கின்றார்கள் என்பதே பிரதான கேள்வியாக எழுந்துள்ளதாகவும் ஹிந்துஸ்தான் நாளிதழ் வினவுகிறது.

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அண்டை நாடான இந்தியா இதுவரை இலங்கைக்கு நான்கு பில்லியன் டொலர் கடனை வழங்கியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் வசதியைப் பெறவிருக்கும் மார்ச் மாதம் வரையிலான காலப்பகுதியில் இலங்கை பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பல மோசமான அனுபவங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அந்த செய்தித்தாள் மேலும் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உமா ஓயாவில் மூழ்கி இரு சிறுவர்கள் பலி

வெலிமடை பகுதியில் உள்ள உமா ஓயாவில் நீராட சென்ற 10 வயதுடைய இரண்டு சிறுவர்கள் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...

“ஒரு அழகான வீடு – ஒரு வளர்ந்த குடும்பம்” வரிசை வீடு ஒழுங்குபடுத்தும் திட்டம் ஆரம்பம்

க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தை முன்னிட்டு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக “ஒரு அழகான வீடு -...

வைத்தியர் மஹேஷியின் மகள் விளக்கமறியலில்

நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் மருத்துவர் மஹேஷி விஜேரத்னவின் மகள் எதிர்வரும் ஜூலை 9 ஆம் திகதி வரை...