follow the truth

follow the truth

May, 11, 2025
Homeஉள்நாடுதேர்தல் நியாயமன்றம் புதிதாக அமைக்கப்பட வேண்டும் - பாராளுமன்ற விசேட குழுவில் பரிந்துரை

தேர்தல் நியாயமன்றம் புதிதாக அமைக்கப்பட வேண்டும் – பாராளுமன்ற விசேட குழுவில் பரிந்துரை

Published on

அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கு புதிய வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா, தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவில் நேற்று (29) தெரிவித்தார்.

சில அரசியல் கட்சிகள் மாவட்டத்துடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் அரசியல் கட்சிகளைப் பதிவுசெய்வதற்கான அளவுகோல்களில் குறைபாடுகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகள், பதிவு செய்யப்பட்ட கட்சிகள் மற்றும் பிராந்திய கட்சிகள் என்ற ரீதியில் அரசியல் கட்சிகளை வகைப்படுத்தி, அவற்றைப் பதிவுசெய்வதற்கான திட்டமொன்று உருவாக்கப்பட வேண்டும் என்றும் நிமல் புஞ்சிஹேவா, விசேட குழு முன்னிலையில் தெரிவித்தார்.

பாராளுமன்ற விசேட குழு அதன் தலைவர் சபை முதல்வர், அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் பாராளுமன்றத்தில் நேற்று கூடியது.

No description available.

No description available.

No description available.

No description available.

No description available.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்றும் இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம்

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இன்று (11)...

ரம்பொட – கெரண்டிஎல்ல விபத்தில் அதிகரிக்கும் உயிரிழப்பு

UPDATE - 09.30 ரம்பொட - கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி,...

இன்று சர்வதேச அன்னையர் தினம்

இன்று சர்வதேச அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்னையர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 2ஆவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. அமெரிக்க அன்னையர்...