follow the truth

follow the truth

July, 21, 2025
HomeTOP1மின்சார சபையின் சில தொழிற்சங்கங்கள் சுகயீன விடுமுறை

மின்சார சபையின் சில தொழிற்சங்கங்கள் சுகயீன விடுமுறை

Published on

அரசாங்கத்தின் தற்போதைய வரிக்கொள்கை, மேலதிக கொடுப்பனவை குறைத்தல் உள்ளிட்ட சில விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை மின்சார சபையின் சில தொழிற்சங்கங்கள், எதிர்வரும் திங்கட்கிழமை (27) சுகயீன விடுமுறையை அறிக்கையிட்டு தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளன.

சுமார் 12 இற்கும் அதிகமான தொழிற்சங்கங்கள், இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக, இலங்கை மின்சார சபை பொறியிலாளர் மற்றும் சட்டத்துறை சங்கத்தின் இணைப்பாளர் நந்தன உதய குமார தெரிவித்திருந்தார்.

நாடளாவிய ரீதியாக தமது தொழிற்சங்க பிரதிநிதிகள், எதிர்வரும் 27 ஆம் திகதி சுகயீன விடுமுறையை அறிக்கையிட்டு, கொழும்புக்கு வந்து, இலங்கை மின்சார சபையின் பிரதான காரியாலயம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

மேலும், சுகாதார தொழிற்சங்கங்களுக்கு இடையிலான சந்திப்பபொன்றும் இன்று (25) இடம்பெறவுள்ளதாக ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனத்தின் இணைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்திருந்தார்.

எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்த சந்திப்பு இடம்பெற உள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சீர்திருத்தமா அல்லது சுமைத்திருத்தமா? 2026 கல்வி திட்டத்தை குறை கூறும் ஆசிரியர் சங்கம்

2026ஆம் ஆண்டு நடைமுறைக்கு வர உள்ள கல்வி சீர்திருத்தங்கள், மாணவர்கள்மீது மேலும் சுமையை ஏற்படுத்தும் என்று இலங்கை ஆசிரியர்...

ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள் கைப்பேசி பயன்படுத்தக் கூடாது

ஆறு வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகள் கைப்பேசிகளை பயன்படுத்துவதற்குப் பெற்றோர் அனுமதிக்கக் கூடாது என மகளிர் மற்றும் சிறுவர் விவகார...

உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகளை நடத்தும் உரிமை இங்கிலாந்துக்கு

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) வருடாந்திர மாநாடு சமீபத்தில் சிங்கப்பூரில் நடைபெற்றது. இதில் பல முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி,...