follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுஐக்கிய மக்கள் சக்தி தாக்கல் செய்த மனு தொடர்பான உத்தரவு

ஐக்கிய மக்கள் சக்தி தாக்கல் செய்த மனு தொடர்பான உத்தரவு

Published on

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்த தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு நிதி வழங்காததன் மூலம், நிதியமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பிரதிவாதிகள் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலிப்பதற்காக எதிர்வரும் மார்ச் மாதம் 03 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த மனுவை எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதிக்கு முன்னர் பரிசீலிக்குமாறு மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எஸ் துரைராஜா, யசந்த கோதாகொட மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற குழு முன்னிலையில் இந்த மனு இன்று (27) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

LATEST NEWS

MORE ARTICLES

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...

சஜித் – அநுர விவாதம் நடைபெறும் திகதி தொடர்பிலான அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி இடையே முன்மொழியப்பட்ட விவாதங்களுக்கான திகதிகளை பரிந்துரைத்து ஐக்கிய மக்கள்...

எல்ல – வெல்லவாய வீதியை கண்காணிக்க விசேட குழு

எல்ல - வெல்லவாய வீதியின் மலித்தகொல்ல பகுதிக்கு மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளை கண்காணிப்பதற்காக தேசிய கட்டிட ஆராய்ச்சி...