follow the truth

follow the truth

May, 16, 2025
Homeஉலகம்இந்தியா - ஈரான் உறவு வலுவாகிறது

இந்தியா – ஈரான் உறவு வலுவாகிறது

Published on

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஈரான் சென்றுள்ளார்.

அங்கு அவர் ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரைசியையும் சந்தித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை புதிய மட்டத்திற்கு கொண்டு செல்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் பிரிக்ஸ் போன்ற குழுக்கள் உலகளாவிய புவி-அரசியல் மாற்றங்களை கணக்கில் எடுத்துக்கொள்வதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று ஈரான் ஜனாதிபதி இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரிடம் கூறியுள்ளார்.

இதனிடையே, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தனது பயணத்தின் போது ஈரானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சரையும் சந்தித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அபுதாபியில் டொனால்ட் டிரம்ப் – பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கைச்சாத்து

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று மாலை கத்தார் நாட்டில் இருந்து அபுதாபிக்கு தனி விமானம் மூலம் விஜயம்...

நியூசிலாந்து பாராளுமன்றில் பழங்குடியின எம்.பிக்கள் 3 பேரை இடைநீக்க பரிந்துரை

நியூசிலாந்து பாராளுமன்றத்தில் பழங்குடியின பாராளுமன்ற உறுப்பினர்கள் 3 பேரை இடைநீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 2024-ம்...

அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க மாட்டேன் – ரஷ்ய ஜனாதிபதி

துருக்கியில் நடைபெறும் ரஷ்ய-உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ரஷ்ய ஜனாதிபதி கலந்து கொள்ள மாட்டார் என்று கிரெம்ளின் தெரிவித்துள்ளது. உக்ரைன் ஜனாதிபதி...