follow the truth

follow the truth

June, 30, 2025
Homeஉள்நாடுநாளை முதல் வவுச்சர்கள் மூலம் உரத்தை கொள்வனவு செய்ய அனுமதி

நாளை முதல் வவுச்சர்கள் மூலம் உரத்தை கொள்வனவு செய்ய அனுமதி

Published on

பொலன்னறுவை மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வவுச்சர்கள் மூலம் நாளை முதல் யூரியா உரத்தை கொள்வனவு செய்ய அனுமதி வழங்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தினால் வழங்கப்படும் வவுச்சர்கள் மூலம் உரங்களை கொள்வனவு செய்ய முடியவில்லை என விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் ஊடகங்களில் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் விவசாய அமைச்சு இதனை அறிவித்திருந்தது.

இதன்படி நாளை முதல் பொலன்னறுவை மாவட்ட விவசாய சேவை நிலையங்களுக்கு உரம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை உர கம்பனி மற்றும் கொமர்ஷல் உர கம்பனியின் தலைவர் கலாநிதி ஜகத் பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ள 22,500 மெற்றிக் தொன் யூரியா உரத்துடன் கப்பலில் இருந்து உரம் இறக்கும் பணி இன்று ஆரம்பிக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புத்தகங்களின் விலை 20% உயர்வு

அச்சிடப்பட்ட புத்தகங்களுக்கு பெறுமதி சேர் வரி (VAT) மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி விதிக்கப்பட்டதன் காரணமாக, புத்தக விலை...

அனைத்து மாகாணங்களிலும் மழையுடன் கூடிய பலத்த காற்றுக்கு சாத்தியம்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்கள், அதேபோல் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பல தடவைகள்...

ஐந்து சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், ஐந்து சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றங்கள் மற்றும்...