follow the truth

follow the truth

May, 14, 2025
Homeவிளையாட்டுபாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் வீரர்களுக்கான விசேட ஒப்பந்தம்

பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் வீரர்களுக்கான விசேட ஒப்பந்தம்

Published on

வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தான் பெண் கிரிக்கெட் வீரர்களுக்கு உள்ளூர் ஒப்பந்தங்களை வழங்க முடிவு செய்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

74 வீரர்களுக்கு 11 மாத காலத்திற்கு இந்த ஒப்பந்தங்களை அவர்கள் வழங்கியுள்ளனர், அவர்களில் 59 வீரர்கள் வளர்ந்து வரும் மற்றும் 19 வயதுக்குட்பட்ட வீரர்களாக உள்ளனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, இந்த ஒப்பந்தங்கள் வழங்கப்பட்ட வீரர்கள் எவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் பிரதான ஒப்பந்தங்களில் இடம்பெறாத வீரர்கள் இல்லை என குறிப்பிட்டுள்ளது.

இந்த ஒப்பந்தங்களில் சேர்க்கப்பட்ட 74 வீரர்களில், 14 பேர் பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியை முன்பு பிரதிநிதித்துவப்படுத்திய வீரர்கள், இதில் ஜாவேரியா கான், கைனாட் இம்தியாஸ், அனம் அமீன் மற்றும் ஐமன் அன்வர் ஆகியோர் அடங்குவர்.

இந்த வீரர்கள் தவிர, தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தாத மூத்த வீரரான நோரீன் யாகூப் என்பவரும் இந்த ஒப்பந்தங்களில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த வீராங்கனைகளை சலீம் ஜாபர் தலைமையிலான மகளிர் கிரிக்கெட் தேர்வுக் குழு தேர்வு செய்துள்ளதுடன், ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள வீராங்கனைகளுக்கு போட்டித் தொகை மற்றும் பரிசுத் தொகையுடன் மாதாந்தம் ஓரளவு பணம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

IPL போட்டிகளில் ஆடல், பாடல் கொண்டாட்டம் வேண்டாம்

பஹல்காம் தாக்குதலால் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்ததன் காரணமாக 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்...

இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் சனியன்று மீண்டும் ஆரம்பம்

இந்திய பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடரை மீண்டும் மே 17 ஆம் திகதி தொடங்க இந்திய கிரிக்கெட்...

வீரர்களை நாடு திரும்புமாறு தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை அறிவிப்பு

தமது அணி வீரர்கள் எதிர்வரும் 26 ஆம் திகதிக்குள் நாடு திரும்ப வேண்டும் எனத் தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை...