follow the truth

follow the truth

May, 12, 2025
Homeஉள்நாடு180 மில்லியன் ரூபா பெறுமதியான கொகேய்னுடன் துனீசிய பிரஜை கைது

180 மில்லியன் ரூபா பெறுமதியான கொகேய்னுடன் துனீசிய பிரஜை கைது

Published on

180 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான 4 கிலோ 527 கிராம் கொகேய்னுடன் துனீசிய பிரஜை ஒருவர் இன்று (15) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கலாநிதி பட்டம் பெற்ற சர்வதேச நிதி நிறுவனமொன்றின் தலைவர் என்பதை காட்டும் போலி ஆவணங்களையும் சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகநபர் துனீசியாவிலிருந்து பிரேசிலுக்கு பயணித்து, அங்கிருந்து தோஹாவிற்கு சென்று பின்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன், பயணியொருவரால் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட அதிகூடிய கொகேய்ன் தொகை இதுவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக கைப்பற்றப்பட்ட கொகேய்னுடன் குறித்த சந்தேக நபரை, போதைப்பொருள் ஒழிப்பு பிரிவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முழு நாட்டின் கவனத்தையும் ஈர்த்த அந்தத் தாயின்அன்பு.. விதியின் விளையாட்டு வென்றது

கொத்மலை – கெரண்டி எல்ல பகுதியில் பேருந்து விபத்து நடந்தபோது, ஒரு தாயின் அன்பின் வலிமையை உலகிற்கு உணர்த்தும்...

கொத்மலை – கெரண்டி எல்ல விபத்து குறித்து விசேட விசாரணைகள் ஆரம்பம்

கொத்மலை - கெரண்டி எல்ல பிரதேசத்தில் பேருந்து விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதாக...

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தினை வரவேற்கிறேன் – ஜனாதிபதி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் வரவேற்று இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிக்கையொன்றை...