follow the truth

follow the truth

May, 15, 2025
Homeஉள்நாடுசஹ்ரான் குழுவுடன் தொலைபேசியில் தொடர்பை பேணிய ஒருவர் கைது

சஹ்ரான் குழுவுடன் தொலைபேசியில் தொடர்பை பேணிய ஒருவர் கைது

Published on

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமுடன் தொலைபேசியில் தொடர்பை ஏற்படுத்தி வந்த காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய நபர் நேற்று(16) பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினரால் உயித்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்றுவருகிறது.

இந்நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹசீமின் சகாக்களுடன் கடந்த காலத்தில் தொலைபேசியில் தொடர்பை பேணிவந்துள்ளவர்கள் தொடர்பான விசாரணையில் குறித்த நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்த வருடத்தில் சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவு

இந்த வருடத்தில் இதுவரை சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. மே மாதத்தில்...

அதிக சத்தம் எழுப்பும் மோட்டார் சைக்கிள்களை மடக்கி பிடித்த பொலிஸார்

அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலன்சரை பொருத்தி பயணித்த 15 மோட்டார் சைக்கிள்களும் அதிக வலுகொண்ட 04 மோட்டார் சைக்கிள்களும்...

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலம் நாளை

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏளத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26...