follow the truth

follow the truth

July, 4, 2025
HomeTOP2ரணில் பொதுவேட்பாளராக களமிறங்கும் சின்னம்?

ரணில் பொதுவேட்பாளராக களமிறங்கும் சின்னம்?

Published on

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பொதுச் சின்னத்துடன் இணைந்து போட்டியிடுவது நிரந்தரமானது என ஐக்கிய தேசியக் கட்சியின் மினுவாங்கொட தொகுதி அமைப்பாளரும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகருமான ஆஷு மாரசிங்க தெரிவித்திருந்தார்.

தேசிய வேட்பாளராக யானை, பொஹட்டுவ மற்றும் அன்னம் சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் குழுக்களுடன் கலந்துரையாடி வருவதாகவும் ஜனாதிபதியின் ஆலோசகர் குறிப்பிட்டுள்ளார்.

யானைச் சின்னத்தில் போட்டியிட்டால் தனக்கு விசுவாசமான அரசியல் கட்சிகளின் வாக்குகளைப் பெறாமல் போகலாம் என்றும், பொஹொட்டுவ சின்னத்தில் போட்டியிட்டால் நட்புக் கட்சிகள் மற்றும் அரசியல் குழுக்களின் ஆதரவைப் பெறாமல் போகலாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

அத்துடன், ஜனாதிபதி தரப்பினர் கடந்த தேர்தல்களில் அன்னம் சின்னத்தில் போட்டியிட்டமையால் மற்றுமொரு அரசியல் சின்னத்தின் மீது கவனம் செலுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, பல விடயங்கள் கலந்துரையாடப்பட்ட போதிலும் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் ஜனாதிபதியின் ஆலோசகர் மேலும் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஜனாதிபதியின் ஆலோசகர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாகவும், தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் அந்த உறுப்பினர்கள் அனைவரும் ஒரே குழுவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகும்போது அவருக்கு ஆதரவளிக்க ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச முன்வந்திருந்தால் அவருக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டிருக்கும் எனவும் தற்போதைய பிரதமர் தினேஸ் குணவர்தனவிற்கு அந்த பதவி வழங்கப்பட மாட்டாது எனவும் ஜனாதிபதி ஆலோசகர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

6 மாதங்களில் 120.5 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டிய மதுவரித் திணைக்களம்

மதுவரித் திணைக்களம் 6 மாதங்களில் 120.5 பில்லியன் ரூபாய்கள் குறிப்பிடத்தக்க வருமானத்தை ஈட்டியுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கை மதுவரித்...

கொழும்பு – அவிசாவளை வீதியில் மாற்று வழியை பயன்படுத்துமாறு அறிவித்தல்

கொழும்பு - அவிசாவளை லோலெவல் வீதியில் இன்று (04) மாலை 4 மணி முதல் சுமார் 3 மணி...

தேசிய ஆராய்ச்சி, அபிவிருத்திக் கொள்கை குறித்து தெளிவுபடுத்தும் நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவு

ஜனாதிபதி அலுவலகம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு என்பன இணைந்து ஏற்பாடு செய்த தேசிய ஆராய்ச்சி மற்றும்...