follow the truth

follow the truth

May, 15, 2025
Homeஉலகம்மகிழ்ச்சியாக இல்லையென்றால் வேலைக்கு வரவேண்டாம் - சீனாவில் புதிய திட்டம்

மகிழ்ச்சியாக இல்லையென்றால் வேலைக்கு வரவேண்டாம் – சீனாவில் புதிய திட்டம்

Published on

சீனாவில் உள்ள ஒரு வணிக நிறுவனம், ஆரோக்கியமான வேலை-வாழ்க்கை சமநிலையை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு, ஊழியர்களுக்கு ‘மகிழ்ச்சியற்ற விடுப்பு’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தப் பிரிவில் உள்ள ஊழியர்களுக்கு ஓரிரு நாட்கள் மட்டும் அல்லாமல் 10 நாட்கள் விடுமுறை அளித்துள்ளது குறித்த நிறுவனம்.

எல்லோருக்கும் மகிழ்ச்சியற்ற நேரங்கள் இருக்கும், அதனால் நீங்கள் மகிழ்ச்சியாக இல்லை என்றால் வேலைக்கு வர வேண்டாம். இந்த மாற்றம் ஊழியர்கள் தங்கள் ஓய்வு நேரத்தை தீர்மானிக்க உதவுகிறது. “நிர்வாகம் இந்த விடுமுறையை மறுக்க முடியாது,” என நிறுவனம் அறிவித்துள்ளது.

யூ டோங்லாய் நிறுவனத்தில், ஊழியர்கள் ஒரு நாளைக்கு ஏழு மணி நேரம் வேலை செய்ய வேண்டும். வார இறுதி நாட்கள் விடுமுறை. இதனுடன், ஊழியர்களுக்கு 30 முதல் 40 நாட்கள் வருடாந்திர விடுப்புக்கு உரிமை உண்டு.

நிறுவனத்தின் ஊழியர்களின் நலன் முதன்மையானது என்றும் அவர்கள் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே நிறுவனம் சிறப்பாக முன்னேற முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காஸாவில் பட்டினியில் வாடும் மக்கள் – ஐ.நா சபை விடுத்துள்ள எச்சரிக்கை

போரினால் பாதிக்கப்பட்ட காஸாவுக்குள் கடந்த 10 வாரங்களாக உணவு, மருந்து மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அனைத்து உதவி விநியோகங்களும்...

6000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்

ஐ.டி. நிறுவனங்கள் மீண்டும் தங்கள் ஊழியர்களை குறைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். AI-ஐ மையமாக கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான...

இந்தியாவை தாக்க அணு ஆயுதங்களை பயன்படுத்த நாங்கள் திட்டமில்லை – பாகிஸ்தான் அமைச்சர்

காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தி பயங்கரவாத...