follow the truth

follow the truth

May, 15, 2025
Homeஉலகம்மாலைதீவு முன்னாள் ஜனாதிபதியின் சிறை தண்டனை இரத்து

மாலைதீவு முன்னாள் ஜனாதிபதியின் சிறை தண்டனை இரத்து

Published on

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீன், அந்நாட்டின் நீதிமன்றம் கடந்த 2022ஆம் ஆண்டு அவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

தனக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து அப்துல்லா யாமீன் மேல்முறையீடு செய்தமை தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அப்துல்லா யாமீனுக்கு விதிக்கப்பட்ட 11 ஆண்டு சிறை தண்டனையை இரத்து செய்து உத்தரவிட்டது.

கடந்த 2022ஆம் ஆண்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட விசாரணை நியாயமான முறையில் நடைபெறவில்லை என்றும், இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இருப்பினும் மறுவிசாரணை குறித்த திகதிகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

மாலைதீவில் அடுத்த 2 நாட்களில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அப்துல்லா யாமீனின் விடுதலை அந்நாட்டின் ஜனாதிபதி முகமது முய்சுவின் கட்சிக்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காஸாவில் பட்டினியில் வாடும் மக்கள் – ஐ.நா சபை விடுத்துள்ள எச்சரிக்கை

போரினால் பாதிக்கப்பட்ட காஸாவுக்குள் கடந்த 10 வாரங்களாக உணவு, மருந்து மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அனைத்து உதவி விநியோகங்களும்...

6000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்

ஐ.டி. நிறுவனங்கள் மீண்டும் தங்கள் ஊழியர்களை குறைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். AI-ஐ மையமாக கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான...

இந்தியாவை தாக்க அணு ஆயுதங்களை பயன்படுத்த நாங்கள் திட்டமில்லை – பாகிஸ்தான் அமைச்சர்

காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தி பயங்கரவாத...