follow the truth

follow the truth

May, 1, 2025
Homeஉள்நாடுஇலங்கையில் மிளகாய் ஐஸ்கிரீம் - விரைவில் சந்தைக்கு

இலங்கையில் மிளகாய் ஐஸ்கிரீம் – விரைவில் சந்தைக்கு

Published on

வெலிமடை பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் மிளகாய் சுவைகொண்ட புதிய வகை ஐஸ் கீரிமை தயாரித்துள்ளார்.

ஊவா பல்கலைக்கழகத்தின் உணவு விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப பிரிவின் வழிகாட்டலில் சுகாதாரத்திற்கு ஏற்ற வகையில் மிளகாய் ஐஸ் கிரீம் தயாரிக்கப்பட்டுள்ளது.

விவசாய நவீனமயப்படுத்தலின் தொழில்நுட்ப மற்றும் நிதி பங்களிப்பில் லசந்த ருவன் லங்காதிலக்க என்ற விவசாயி மிளகாய் ஐஸ் கீரிமை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் குறித்த புதிய வகை ஐஸ் கீரிமின் சுவையை அறியும் வகையில் அமைச்சர் மஹிந்த அமரவீரவிற்கு அது வழங்கப்பட்டது.

காரம் மற்றும் இனிப்புச் சுவை இதில் கலந்துள்ளமை விசேட அம்சமாகும்.

சிறுவர்கள் மற்றும் பெரியோர்களுக்கென இரு பிரிவுகளைக் கொண்ட தயாரிப்பாக இதனை விரைவில் சந்தையில் அறிமுகப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மே தினத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம்

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கொழும்பு நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று(01) விசேட போக்குவரத்து ஒழுங்குகள்...

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற...