follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1பிங்கிரிய பொருளாதார வலயத்தை அபிவிருத்தி செய்ய திட்டம்

பிங்கிரிய பொருளாதார வலயத்தை அபிவிருத்தி செய்ய திட்டம்

Published on

ஏற்றுமதி பொருளாதாரம், உற்பத்தி, சுற்றுலா, தொழில்நுட்பத் துறை, நவீன விவசாய முறை ஆகியவற்றின் ஊடாக நாட்டுக்குள் வலுவான பொருளாதாரத்தைக் கட்டமைக்க முடியும் என்றும், அதற்கு அவசியமான அடித்தளத்தை அரசாங்கம் இட்டுள்ளதெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இலங்கையின் மிகப் பெரிய ஏற்றுமதி வலயமாக 1000 ஏக்கர் பரப்பளவில் பிங்கிரிய ஏற்றுமதி வலயத்தின் இரண்டாம், மூன்றாம் கட்ட அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைக்கும் வகையில் இன்று (12) நடைபெற்ற நிகழ்விலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

நாட்டில் புதிய ஏற்றுமதிப் பொருளாதாரத்தை வலுவூட்டும் வகையில் புதிய முதலீடுகளை ஸ்தாபிக்கப்படும் எனவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.

பிங்கிரிய ஏற்றமதி வலயம் முழுமைபடுத்தப்பட்டதன் பின்னர் 2600 மில்லியன் டொலர் வருமானத்தை ஈட்டிக்கொள்ள எதிர்பார்ப்பதோடு, 75,000 புதிய வேலைவாய்ப்புக்களும் உருவாக்கப்படவுள்ளது.

இதன்போது பிங்கிரிய ஏற்றுமதி வலயத்தின் நிர்மாண பணிகளை முன்னெடுக்கும் Dongxia Industrial & Commerce Co.Ltd. நிறுவனத்தின் அலுவலகத்தை ஜனாதிபதி, திறந்து வைத்தார்.

இரணவில, பிங்கிரிய, சிலாபம் வரையில் சுற்றுலா வலயமொன்றும் அமைக்கப்படவுள்ளது. இரணவில பிரதேசத்தில் கோல்ப் விளையாட்டு மைதானம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. அதேபோல் IT வலயமொன்றைக் கட்டமைக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சிலாபம் பெருந்தோட்ட நிறுவனங்களின் தோட்டங்களை நவீன விவசாயத்துக்காக பயன்படுத்திகொள்ள எதிர்பார்க்கிறோம்.

அதன்படி விவசாயம், தொழில்துறை, உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா வர்த்தகம், மீன்பிடித்துறை ஆகியவற்றை மேம்படுத்துவதன் ஊடாக பிங்கிரியவை இந்நாட்டின் பிரதான பொருளாதார வலயமாக மாற்றியமைக்க எதிர்பார்ப்பதோடு, இதற்கு இணையாக பன்னல, குளியாபிட்டிய பகுதிகளிலும் பாரிய அபிவிருத்தி ஏற்படும். இதனால் மாதம்பை பகுதியில் முற்காலத்தில் காணப்பட்ட செழிப்பை மீண்டும் ஏற்படுத்த முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரச சேவையில் ஊழல் குறைக்கப்பட்டால், உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகளைப் போல இலங்கையையும் அபிவிருத்தி செய்ய முடியும்

இலஞ்சம் மற்றும் ஊழல் அற்ற நேர்மையான அரசாங்க சேவையைக் கட்டியெழுப்ப சகல அரசாங்க உத்தியோகத்தர்களும் மனசாட்சிக்கு இணங்கச் சரியான...

Clean Sri Lanka என்பது எம் அனைவரினதும் lifestyle ஆக இருக்க வேண்டும்

ஒவ்வொரு அதிபரும் தமது பாடசாலையில் Clean Sri Lanka திட்டத்தை முழு நாட்டிற்கும் முன்னுதாரணமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும்,...

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...