கங்காராம விகாரையின் கலபொட ஞானிஸ்ஸர தேரரின் இறுதிக்கிரியைகள் இன்று (05) இடம்பெறவுள்ளன.
இதன்படி விகாரையை சுற்றியுள்ள வீதிகளில் விசேட போக்குவரத்து திட்டத்தை நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இந்த விசேட போக்குவரத்து திட்டம் இன்று (05) பிற்பகல் 2.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.