follow the truth

follow the truth

May, 1, 2025
HomeTOP2அரசாங்க அச்சகத்தில் விசேட பொலிஸ் சோதனைச் சாவடி

அரசாங்க அச்சகத்தில் விசேட பொலிஸ் சோதனைச் சாவடி

Published on

எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகள் அச்சிடப்படும் அரசாங்க அச்சகத்தின் பாதுகாப்பிற்காக நாளை(14) முதல் பொலிஸ் சோதனைச் சாவடி அமைக்கப்படவுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அரச ஊடகப் பொறுப்பதிகாரி திருமதி சந்திராணி லியனகே அவர்களின் எழுத்து மூலமான வேண்டுகோளுக்கு இணங்க, பொரளை பொலிஸாரின் கீழ் இந்த பொலிஸ் சோதனைச் சாவடி ஸ்தாபிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதம பொலிஸ் பரிசோதகர் உட்பட 60 – 70 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இதற்காக கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மேலும், ஜனாதிபதி தேர்தல் முடியும் வரையில் 10 பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கல்ஹின்ன பள்ளிவாசல் தொடர்பான மேன் முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பினை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை

கல்ஹின்ன ஜும்ஆப் பள்ளிவாசல் தொடர்பாக மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வழங்கப்பட்ட...

அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டை பயன்படுத்தும் சேவை தாமதம்

அதிவேக நெடுஞ்சாலைகளில், வங்கி அட்டைகளைப் பயன்படுத்திக் கொடுப்பனவை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேலும் தாமதமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல்...

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் பிரதான பாதுகாப்பு அதிகாரி இடமாற்றம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்ய பொலிஸ்...