follow the truth

follow the truth

June, 23, 2025
HomeTOP1ரயில்வே திணைக்களத்தினால் குழு நியமனம்

ரயில்வே திணைக்களத்தினால் குழு நியமனம்

Published on

காட்டு யானைகள் ரயில்களில் மோதப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காகத் ரயில்வே திணைக்களம் குழுவொன்றை நியமித்துள்ளது.

அதன் பரிந்துரைகளின் அடிப்படையில், ரயில் விபத்துகளால் யானைகள் உயிரிழப்பதைத் தடுப்பதற்காக நீண்ட கால வேலைத் திட்டமொன்றைச் செயல்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

தற்காலிக தீர்வின் அடிப்படையில் மட்டக்களப்பு மார்க்கத்தில் மதிய நேரத்தில் மட்டும் சரக்கு ரயில்களை இயக்குவதற்கு முன்னதாக ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது.

கடந்த 18ஆம் திகதி மின்னேரிய – ரொட்டவௌ பகுதியில் எரிபொருள் போக்குவரத்து ரயிலில் காட்டு யானைகள் மோதிய சம்பவத்தை அடுத்து ரயில்வே திணைக்களம் இந்த வேலைத்திட்டம் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் விஷேட அறிவிப்பு

தற்போதைய போர் சூழ்நிலையை எதிர்கொண்டு எதிர்காலத்தில் எண்ணெய் தொடர்பாக நெருக்கடி நிலை ஏற்பட்டால் தேவையான நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளதாக...

சஜின் வாஸ் குணவர்தனவை கைது செய்ய பிடியாணை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று...

உலகெங்கிலும் உள்ள அமெரிக்கர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக வெளிநாடுகளுக்குச் செல்லும் அல்லது வசிக்கும் அமெரிக்கர்களின் பாதுகாப்பு கடுமையான ஆபத்தில் இருக்கக்கூடும்...