follow the truth

follow the truth

June, 25, 2025
HomeTOP1இந்திய உயர்ஸ்தானிகர் - ஜனாதிபதி சந்திப்பு

இந்திய உயர்ஸ்தானிகர் – ஜனாதிபதி சந்திப்பு

Published on

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் (Santhosh Jha) இடையிலான சந்திப்பு இன்று (01) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்திய உதவியின் கீழ் இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் இங்கு விரிவான மீளாய்வு மேற்கொள்ளப்பட்டதுடன், அந்தத் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் மற்றும் சவால்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் இரு நாட்டு மீனவ சமூகங்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு ஒத்துழைப்புத் திட்டத்தின் மூலம் நீண்டகால தீர்வை எட்டுவதன் முக்கியத்துவம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

வட மாகாண கடல் பிரதேசத்தில் நிலவும் மீன்பிடி பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதுடன், இலங்கை மீனவ சமூகத்தின் நலன்களை பாதுகாப்பதில் தான் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

இலங்கையின் மின்சக்தி மற்றும் வலுசக்தித் துறையின் மேம்பாடு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டத்தின் வெற்றிக்கு இந்தியாவின் ஆதரவை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“பிரஜாசக்தி” தேசிய வேலைத்திட்டம் – ஜனாதிபதி தலைமையில் ஜூலை 04 ஆரம்பம்

சமூகத்தை வலுவூட்டல் மற்றும் பொருளாதார நன்மைகளை நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கப்படுதலை உறுதிப்படுத்தும் வகையில் தற்போதைய அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் "பிரஜாசக்தி"...

ஜயவர்தனபுர பல்கலைக்கழக விடுதியை சேதப்படுத்திய மாணவர்களிடம் தேவையற்ற விதத்தில் பணம் அறவீடு?

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் விடுதிக்கு சேதம் ஏற்படுத்திய பத்து மாணவர்களிடமிருந்து நிர்வாகம் தேவையற்ற விதத்தில்...

துன்புறுத்தல், வன்முறையைத் தடுக்க பணிக்குழுவை நியமிக்க நடவடிக்கை

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் துன்புறுத்தல் மற்றும் வன்முறையைத் தடுப்பதற்காக ஒரு தேசிய பணிக்குழுவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த...