follow the truth

follow the truth

May, 11, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாஉகண்டாவில் உள்ள பணத்தை விரைவில் கொண்டுவருவோம்

உகண்டாவில் உள்ள பணத்தை விரைவில் கொண்டுவருவோம்

Published on

ஜனாதிபதித் தேர்தல் காலங்களில் பெரிதளவில் பேசப்பட்ட உகண்டாவுக்கு கொண்டுசெல்லப்பட்டதாக கூறப்படும் பணம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொடஹெச்சி கருத்து தெரிவித்துள்ளார்.

விகாரையொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

கேள்வி: அரிசி ஒரு கிலோ 270 ரூபா! அப்படித்தானே?
பதில்: ஆம், ஆம்.

கேள்வி: மாற்றம் ஒன்று வருமா?
பதில்:- நிச்சயம் வரும்.

கேள்வி: உகண்டாவுக்கு கொண்டு சென்றதாக சொன்ன அந்த பணம்? கொண்டு வருவீர்களா?

பதில்: நிச்சயம் மிக விரைவில் அதனை நாங்கள் கொண்டு வருவோம்.

ஆனால் இதற்கு முன்னர் தங்கள் தரப்பில் இருந்து அப்படி உகண்டாவுக்கு பணம் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படவில்லை என தேசிய மக்கள் சக்தி அறிவித்திருந்தது.

அந்த பணம் சட்ட ரீதியாக இலங்கையில் அச்சிடப்பட்ட உகண்டா பணம் எனவும் அக்கட்சி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

SLPP புதிய செயற்பாட்டு பிரதானியாக ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய செயற்பாட்டு பிரதானியாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று...

ஒரு பிள்ளை தற்கொலைக்கு முயற்சிப்பது ஒரு சமூகமாக எம் அனைவரினதும் தோல்வியாகும்

பிள்ளைகள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் மற்றும் சம்பவங்கள் குறித்து கருத்துக்களை வெளியிடும்போது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற...

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியரின் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு

கொட்டாஞ்சேனையில் மாணவியொருவர் உயிரிழந்த விவகாரத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரத்தியேக வகுப்பு ஆசிரியரின் வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற...