follow the truth

follow the truth

January, 22, 2025
HomeTOP1சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க புதிய வேலைத்திட்டம்

சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க புதிய வேலைத்திட்டம்

Published on

இந்த வருடம் நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 3 மில்லியனாக அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் சமிந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அதற்கான திட்டங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவான மாதமாக இருந்தது.

233,087 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில் அதிக சுற்றுலா பயணிகளின் வருகை பதிவாகியிருந்ததுடன் அந்த எண்ணிக்கை 218,350 ஆகும்.

இதன்படி, புத்தாண்டில் இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 3 மில்லியன் வரை அதிகரிக்க புதிய வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் சமிந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2025ம் ஆண்டுக்குள் 4,350 புதிய வீடுகள்

2025ம் ஆண்டுக்குள் பெருந்தோட்ட மக்களுக்காக 4,350 புதிய வீடுகள் நிர்மாணிக்கப்படும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர்...

இலங்கை சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் – வர்த்தமானி சிலவற்றுக்கு அனுமதி

இலங்கை சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் உள்ளடங்கிய துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி அறவீட்டுச்...

உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது தற்போதைய அரசின் கொள்கையாகும்

உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கொள்கை ரீதியான முடிவுகளை எடுப்பதற்காக விவசாய,கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த,...