follow the truth

follow the truth

July, 7, 2025
HomeTOP1தனியார் பேருந்துகளை 65 வயது வரை இயக்க சாரதிகளுக்கு வாய்ப்பு

தனியார் பேருந்துகளை 65 வயது வரை இயக்க சாரதிகளுக்கு வாய்ப்பு

Published on

பேருந்துகள் உட்பட பொதுப் போக்குவரத்தில் சாரதிகளை பணியமர்த்துவதற்கு 60 வயது வரை வயது வரம்பு இருப்பதாக வெளியான செய்திகள் பொய்யானவை என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த வரம்பு 65 வயது வரை இருக்கும் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, தூய்மையான இலங்கை வேலைத்திட்டத்தின் கீழ் பேருந்துகள் தொடர்பில் அமுல்படுத்தப்படும் சில நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஆரம்பிக்கப்படவிருந்த தனியார் பேருந்து பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தொழிற்சங்கங்கள் நேற்று தீர்மானித்துள்ளன.

பயணிகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ள தேவையற்ற உதிரிபாகங்களை அகற்றுவதற்கான சலுகைக் காலத்தை 03 மாதங்களாக நீடிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

இதேவேளை, தூய்மையான இலங்கை வேலைத்திட்டம் தொடர்பான பாராளுமன்ற விவாதம் இம்மாதம் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் நடைபெறும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

மேலும், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் நிபந்தனைகளுக்கு அமைய 95 முச்சக்கர வண்டிகள் மற்றும் பேருந்துகள் மாத்திரம் அலங்கரிக்கப்பட்டு அணிகலன்கள் பொருத்தப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் உதவி ஆணையாளர் சுஜீவ தென்னகோன் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் அமைச்சர் டிரான் அலஸுக்கு கொலை மிரட்டல்

முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு, துபாயில் இருந்து செயல்படும் பாதாள உலக தலைவரிடமிருந்து தொலைபேசி மூலம்...

பொரளை பகுதியில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு - பொரளை பகுதியில், நாளை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. கர்தினால் மல்கம் ரஞ்சித், இறைப்பணியில் 50 ஆண்டுகளை...

கஹவத்த துப்பாக்கிச்சூடு சம்பவம்: பொலிஸ் ஆணைக்குழு விசாரணை

கஹவத்த பகுதியில் கடந்த ஜூன் 30ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில், தேசிய பொலிஸ் ஆணைக்குழு...