follow the truth

follow the truth

May, 1, 2025
Homeவிளையாட்டுமாத்தறை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் கட்டுமானப் பணிகள் விரைவில்

மாத்தறை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் கட்டுமானப் பணிகள் விரைவில்

Published on

மாத்தறை பொல்ஹேன சர்வதேச கிரிக்கெட் பயிற்சிப் பாடசாலை மற்றும் மைதானத்தின் கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதற்குத் தேவையான முதற்கட்டப் பணிகளை ஒரு மாதத்திற்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தைத் தொடங்குவது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (13) மாத்தறை மாவட்டச் செயலகத்தில் இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளுடன் நடைபெற்றது.

இந்நிகழ்வில், முன்மொழியப்பட்ட நிலத்தின் அறங்காவலரான அமரபுர தர்மரக்ஷித நிகாயவின் மகாநாயக்கர் ஆனந்த மஹிமியன், இலங்கை கிரிக்கெட் சார்பாக ஷம்மி டி சில்வா, சனத் ஜெயசூரிய மற்றும் சுஜீவ கோடலியத்த, மாத்தறை விளையாட்டுக் கழகத்தின் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க, மாத்தறை மாவட்டச் செயலாளர் சந்தன திலகரத்ன மற்றும் பல அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும். இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நிதி ஒதுக்கிய போதிலும் இன்னும் புதுப்பிக்கப்படாத சனத் ஜெயசூர்யா மைதானத்தின் புனரமைப்புப் பணிகளை உடனடியாகத் தொடங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரிஷப் பண்டுக்கு 24 இலட்சம் ரூபா அபராதம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு...

விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்குமா சென்னை? – ஹைதராபாத்துடன் இன்று மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், சென்னையில் இன்று நடக்க இருக்கும் 43-ஆவது லீக் போட்டியில் ஐதராபாத் அணியை சென்னை சூப்பர்...

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இன்றைய ஐபிஎல் போட்டியில் அஞ்சலி

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (23) இரவு ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 41-வது லீக்...