follow the truth

follow the truth

May, 7, 2025
Homeஉலகம்இன்று இதுவரை 1100க்கும் அதிகமான விமானங்கள் இரத்து

இன்று இதுவரை 1100க்கும் அதிகமான விமானங்கள் இரத்து

Published on

ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவின் பல மாகாணங்களில் கோவிட் தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகின்றமையினால் கொரோனா கட்டுப்பாடுகளின் ஓர் அங்கமாக விமானங்கள் இரத்து செய்யப்படுகின்றன.

இதனால் கிறிஸ்மஸ் விடுமுறைக்காக வெளியூர் சென்ற பல லட்சம் பேர் தங்கள் பணியிடம் உள்ள ஊர்களுக்கு திரும்ப முடியாத நிலையில் உலக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளிக்கிழமை முதல், உலகெங்கும் சுமார் 11,500 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், பல விமானங்களின் புறப்படும் நேரம் தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

திங்கட்கிழமை மட்டும் சுமார் 3,000 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், செவ்வாய்க்கிழமையான இன்று 1100க்கும் அதிகமான விமானங்கள் இதுவரை இரத்தாகியுள்ளதாக ஃப்ளைட்அவேர் எனும் விமானப் பயணம் குறித்த தகவல்களைத் தரும் இணையதளம் கூறுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மே 10 வரை விமான சேவை இரத்து

இந்தியாவில் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து 165 உள்நாட்டு விமானங்களை மே 10 வரை இரத்து செய்வதாக...

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் அவசரநிலை

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய இராணுவத்தால் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கப்பட்டது. பஹவல்பூர் முதல் கோட்லி வரை 9 பயங்கரவாத முகாம்கள்...

இந்தியாவும் பாகிஸ்தானும் இராணுவக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும்

இந்தியாவும் பாகிஸ்தானும் இராணுவக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் அழைப்பு விடுத்துள்ளார். இந்தியாவிற்கும்...