தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான கஞ்சிபான இம்ரானின் நெருங்கிய நண்பர் எனக் கூறப்படும் ஒருவரை, குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கைது செய்துள்ளது.
இந்தியாவிலிருந்து இன்று நாடு கடத்தப்பட்ட நிலையில், அவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.