follow the truth

follow the truth

July, 25, 2025
HomeTOP1வெலிகம பிரதேச சபையின் அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்திக்கு

வெலிகம பிரதேச சபையின் அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்திக்கு

Published on

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எதிர்க்கட்சி பெரும்பான்மையைப் பெற்றிருந்த வெலிகம பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தி தனது அதிகாரத்தை பலப்படுத்திக் கொண்டு அதன் தவிசாளரை தெரிவு செய்துள்ளது.

சீதாவக்கபுர நகர சபையின் தவிசாளர் தேர்ந்தெடுப்பதற்காக இன்று (24) நடைபெற்ற தேர்தலில், ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் லசந்த விக்ரமசேகர பெரும்பான்மை வாக்குகளுடன் வெலிகம பிரதேச சபையின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வெலிகம பிரதேச சபைக்கு பலத்த பாதுகாப்பு — UPDATE

வெலிகம பிரதேச சபை தவிசாளரை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று (24) இரண்டாவது முறையாக நடைபெவுள்ள நிலையில், அந்தப் பகுதியில் பாதுகாப்பு கடுமையாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

முந்தைய தவிசாளர் தேர்தல் கடந்த மாதம் 27ஆம் திகதி நடைபெற்றது. அந்தவேளை, தேசிய மக்கள் சக்தி கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் கடத்தப்பட்டதாக கூறப்பட்டதுடன், பிரதேச சபை வளாகத்தில் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, தென் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எரந்தி டி. உமங்கா மெண்டிஸ், தவிசாளர் தேர்தலை இன்றையதுவரை ஒத்திவைக்க தீர்மானித்திருந்தார்.

தற்போது வெலிகம பிரதேச சபை வளாகத்திற்கு அருகில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படை உறுப்பினர்கள் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளதாகவும், நிலைமை தற்போது அமைதியாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

05 நாட்டு தூதுவர்களுடன் பிரதமரின் இராஜதந்திர சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, இன்றைய தினம் பாராளுமன்ற வளாகத்தில் முக்கியமான இராஜதந்திர சந்திப்புகளை நடத்தினார். இதன் போது, (டாக்காவைத்...

அமெரிக்கா தீர்வை வரி – ஜனாதிபதி மற்றும் அமெரிக்க வர்த்தக முகவர் அலுவலகத்தின் தூதுவர் இடையே இணையவழி கலந்துரையாடல்

இலங்கை ஏற்றுமதிக்கு அமெரிக்கா விதித்துள்ள தீர்வை வரிகளை குறைப்பது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அமெரிக்காவின் வர்த்தக முகவர்...

ரயில் கடவை திருத்தும் பணிகள் காரணமாக மூடப்படவுள்ள வீதி

பொத்துஹெர அமுனுகம ரயில் கடவை சீர்த்திருத்தும் பணிகள் காரணமாக நெடுஞ்சாலை மூடப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி,...