follow the truth

follow the truth

July, 26, 2025
HomeTOP2இலங்கை - கனடா முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துவதில் கனேடிய அரசாங்கத்தின் விசேட கவனம்

இலங்கை – கனடா முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துவதில் கனேடிய அரசாங்கத்தின் விசேட கவனம்

Published on

இலங்கைக்கான கனேடிய தூதுவர் எரிக் வால்ஸ் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோருக்கு இடையேயான சந்திப்பொன்று நேற்று (24) நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

மக்களின் நம்பிக்கையை வென்ற மற்றும் ஊழல் இல்லாத புதிய அரசாங்கத்துடன் வணிக மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்த கனேடிய அரசாங்கம் தயாராக இருப்பதாக தெரிவித்த தூதுவர், இதற்காக கனேடிய வணிக சமூகம் மற்றும் வர்த்தக பிரதிநிதிகளுக்குத் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறையின் வளர்ச்சி, சுற்றுலாத் துறையை மேம்படுத்துதல், வர்த்தக கூட்டாண்மைகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான பாராளுமன்ற ஒத்துழைப்பு உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்து சபைத் தலைவருடன் விரிவான கலந்துரையாடல்களை நடத்திய தூதுவர், இலங்கையின் எதிர்கால வளர்ச்சி செயல்முறைக்கு மேலும் ஆதரவை வழங்குவதாகவும் வலியுறுத்தினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாதுகாப்பு அமைச்சின் புதிய ஊடக பேச்சாளர் நியமனம்

பாதுகாப்பு அமைச்சின் புதிய ஊடக பணிப்பாளர் மற்றும் பேச்சாளராக பிரிகேடியர் பிரேங்க்ளின் ஜோசப், நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் இந்தப் பதவியில் இருந்த...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை

மத்திய ,சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் எனவும்...

ஜூலையில் இதுவரை ஒரு இலட்சத்துக்கும் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை

ஜூலை மாதத்தின் முதல் 23 நாட்களில் மாத்திரம் ஒரு இலட்சத்து 45,188 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா...