follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடுசிசிடி விசாரணைகளை மேற்பார்வை செய்ய திலீப பீரிஸ் நியமிப்பு

சிசிடி விசாரணைகளை மேற்பார்வை செய்ய திலீப பீரிஸ் நியமிப்பு

Published on

கொழும்பு – பொரளை அனைத்து பரிசுத்தவான்கள் தேவாலயத்திலிருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளை மேற்பார்வை செய்வதற்காக, சிரேஷ்ட பிரதி மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸை சட்டமா அதிபர் நியமித்துள்ளார்.

பொரளை அனைத்து பரிசுத்தவான்களின் தேவாலயத்திலிருந்து கடந்த ஜனவரி 11 ஆம் திகதி கைக்குண்டொன்று மீடகப்பட்டிருந்தது.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வரும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர்  சம்பவம் தொடர்பில் இதுவரை 7 பேரை கைதுசெய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் குறித்த விசாரணைகளின் முன்னேற்றத்தை, நாளையதினம்  மன்றுக்கு அறிவிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு கடந்த வழக்கு விசாரணையின்போது உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொரளை பகுதியில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு - பொரளை பகுதியில், நாளை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. கர்தினால் மல்கம் ரஞ்சித், இறைப்பணியில் 50 ஆண்டுகளை...

கஹவத்த துப்பாக்கிச்சூடு சம்பவம்: பொலிஸ் ஆணைக்குழு விசாரணை

கஹவத்த பகுதியில் கடந்த ஜூன் 30ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில், தேசிய பொலிஸ் ஆணைக்குழு...

வாவியில் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி

மட்டக்களப்பின் வாகரை பகுதியில் உள்ள பனிச்சங்கேணி வாவியில், இன்று பிற்பகல் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி...