follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடு125 பாடசாலைகள் தரமுயர்த்தப்படவுள்ளன

125 பாடசாலைகள் தரமுயர்த்தப்படவுள்ளன

Published on

மேலும் 125 பாடசாலைகளை எதிர்வரும் 02 மாதங்களில் தேசிய பாடசாலை தரத்திற்கு உயர்த்தவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எந்தவொரு தேசிய பாடசாலையும் இல்லாத 125 பிரதேச செயலக பிரிவுகளில், தலா ஒரு பாடசாலை வீதம் தேசிய பாடசாலை தரத்திற்கு உயர்த்தப்படவுள்ளதாக அமைச்சின் தேசிய பாடசாலைகளுக்கான பணிப்பாளர் கித்சிறி லியனகம குறிப்பிட்டார்.

ஆயிரம் தேசிய பாடசாலைகளை உருவாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இதுவரை 831 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த பாடசாலைகளை இவ்வருட இறுதிக்குள் கட்டங்கட்டமாக தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுவரை 09 மாகாணங்களிலும் 09 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் தேசிய பாடசாலைகளுக்கான பணிப்பாளர் கித்சிறி லியனகம கூறினார்.

வசதிகளுடன் கூடிய கற்றலுக்கான சூழலை மாணவர்களுக்கு ஏற்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கமென அவர் மேலும் தெரிவித்தார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொரளை பகுதியில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு - பொரளை பகுதியில், நாளை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. கர்தினால் மல்கம் ரஞ்சித், இறைப்பணியில் 50 ஆண்டுகளை...

கஹவத்த துப்பாக்கிச்சூடு சம்பவம்: பொலிஸ் ஆணைக்குழு விசாரணை

கஹவத்த பகுதியில் கடந்த ஜூன் 30ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில், தேசிய பொலிஸ் ஆணைக்குழு...

வாவியில் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி

மட்டக்களப்பின் வாகரை பகுதியில் உள்ள பனிச்சங்கேணி வாவியில், இன்று பிற்பகல் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி...