follow the truth

follow the truth

May, 11, 2025
Homeஉள்நாடுபல்கலைக்கழக பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பில் வெளியான தகவல்

பல்கலைக்கழக பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பில் வெளியான தகவல்

Published on

இலங்கை அரச பல்கலைக்கழகங்களில் பகிடிவதை, பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகள் (SGBV) அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், அரச பல்கலைக்கழகங்களில் 16.6 சதவீத மாணவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர் எனவும் புதிய ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் (UGC) பாலின சமத்துவம் மற்றும் சமத்துவத்திற்கான நிலையம், யுனிசெப் உடன் இணைந்து, பழைய, புதிய பல்கலைக்கழகங்கள் மற்றும் மோதல்கள் நிலவிய பகுதிகளில் காணப்பட்ட பல்கலைக்கழங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டன.

“அண்மைக் காலமாக இலங்கையில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் பகிடிவதை ,பால் நிலையை அடிப்படையாகக்கொண்ட வன்முறை அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது” என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

ஆய்வின்படி, கணக்கெடுக்கப்பட்ட மாணவர்களில் 51 சதவீதத்துக்கும் அதிகமானோர் வாய்மொழி துன்புறுத்தலுக்கும், 34.3 சதவீதமானோர் உளவியல் வன்முறைக்கும், 23.8 சதவீதமானோர் உடல் ரீதியான துஷ்பிரயோகத்திற்கும், 16.6 சதவீதமானோர் பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளாகியுள்ளனர். கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு மாணவர்கள் முகம் கொடுக்கிறார்கள் எனவும், கிட்டத்தட்ட அனைத்து சம்பவங்களும் ஒரு பல்கலைக்கழகத்தில் மட்டுமே பதிவாகியுள்ளன.

பல்கலைக்கழக ஊழியர்களில் 44 சதவீதமானோர் வாய்மொழி பாலியல் வன்முறைக்கு ஆளானதாகவும், 22.3 சதவீதமானோர் பாலியல் லஞ்சம் கேட்டதாகவும், 19.9 சதவீதமானோர் உடல் ரீதியான பாலியல் வன்முறையை அனுபவித்ததாகவும் அறிக்கை வெளிப்படுத்துகிறது. அரச பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களில், 21 சதவீதமானோர் வாய்மொழி பாலியல் வன்முறைக்கு ஆளாகியுள்ளதாகவும், 1.5% பேர் பாலுறவுக்கு கட்டாயப்படுத்தப்பட்ட தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிடிவதை பெரும்பாலும் முதல் வருடத்தில் மட்டும் நடப்பதாகக் கருதப்பட்டாலும், மாணவர்கள் தங்கள் முதலாம் ஆண்டு முடிவில் துன்புறுத்தல் முடிவுக்கு வராது என்றும் ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கிடையில், இலங்கையில் உள்ள அனைத்து உயர் கல்வி நிறுவனங்களையும் மேற்பார்வையிடும் UGC, புதிய மாணவர்களை சிரேஷ்ட மாணவர்கள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில் சமீபத்தில் கூடுதல் விதிமுறைகளை விதித்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கோபா குழுவில் முன்னிலையான ரயில்வே திணைக்களம்

பல வருடங்களாக கணக்காய்வு அறிக்கைகளை முறையாக சமர்ப்பிக்க ரயில்வே திணைக்களம் தவறியுள்ள விடயம் கோபா குழுவின் முன்னிலையில் தெரியவந்தது. இதன்...

இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமையினால் உஷாராகும் வாகன இறக்குமதி

நான்கு வருடங்களுக்குப் பின்னர், இடைநிறுத்தப்பட்டிருந்த இறக்குமதி கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டமையினால் வாகன இறக்குமதி துறையினர் நன்மையடைந்து வருகின்றனர். இதற்கமைய தற்போது...

ஹஜ் யாத்திரை செல்லும் முதலாவது இலங்கை யாத்திரிகர்கள் குழு பயணம்

இம்முறை ஹஜ் யாத்திரை செல்லும் முதலாவது இலங்கை யாத்திரிகர்கள் குழு இன்றைய தினம் நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றது. அவர்களை யாத்திரைக்கு...