follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடுசட்ட விரோதமாக சேகரித்த பெருந்தொகையான எரிபொருட்கள் மீட்பு

சட்ட விரோதமாக சேகரித்த பெருந்தொகையான எரிபொருட்கள் மீட்பு

Published on

எரிபொருளை அதிகளவில் சேமித்தல், சட்டவிரோத விற்பனையில் ஈடுப்படுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களை கண்டறியும் நோக்கில் நேற்று விசேட சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, 10,115 லீட்டர் டீசலும், 5,690 லீட்டர் பெற்றோல் மற்றும் 5,620 லீட்டர் மண்ணெண்ணைய் ஆகியன பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹல் தல்துவ ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இவ்வாறு சட்ட விரோதமாக எரிபொருள் சேகரித்த 135 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், சந்தேக நபர்களிடம் இருந்து பெற்றோலும் டீசலும் மீட்கப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்திருந்தது.

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, எரிபொருளை சேமித்து சட்டவிரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கபட்டு வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வைத்தியர் மஹேஷியின் மகள் விளக்கமறியலில்

நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் மருத்துவர் மஹேஷி விஜேரத்னவின் மகள் எதிர்வரும் ஜூலை 9 ஆம் திகதி வரை...

“வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான சட்ட உதவி” – அரச அதிகாரிகளுக்கான விளக்கவுரை

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சட்டப் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட “வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான சட்ட உதவி” தொடர்பாக, குருநாகல்...

தேங்காய் விலையில் வீழ்ச்சி

சந்தையில் தேங்காயின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த சில மாதங்களாக, 220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட...