follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP1இலங்கையிலிருந்து திறமையான தொழிலாளர்களை தொழிலுக்கு அமர்த்த விருப்பம் : குவைத் தூதுவர்

இலங்கையிலிருந்து திறமையான தொழிலாளர்களை தொழிலுக்கு அமர்த்த விருப்பம் : குவைத் தூதுவர்

Published on

வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை குவைத் தூதுவர் கலஃப் பு தைர் நேற்று சந்தித்தார். தூதுவர் தனது தொடக்க உரையில், குவைத் வெளிநாட்டு அமைச்சர் ஷேக் கலாநிதி. அஹமத் நாசர் அல்-அஹமத் அல்-சபாவிடமிருந்தான வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், இலங்கை அரசாங்கத்துடன் இருதரப்பு வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்கான குவைத் அரசாங்கத்தின் விருப்பத்தை வெளிப்படுத்தினார். குவைத் அரசாங்கம் சுகாதாரம் மற்றும் சக்திவளத் துறைகளில் இலங்கையிலிருந்து திறமையான தொழிலாளர்களை தொழிலுக்கு அமர்த்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் தூதுவர் மேலும் தெரிவித்தார்.

தூதுவரின் கருத்துக்களுக்கு பதிலளித்த வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ், இலங்கை அரசாங்கமும் குவைத் அரசாங்கமும் மிகவும் நட்புறவான உறவுகளை அனுபவித்து வருவதாகவும், தனது காலப்பகுதியில் வளைகுடா நாடுகளுடனான இலங்கையின் உறவுகளை வலுப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார். கோவிட்-19 அவசர சுகாதாரத் துறைத் தேவைகளுக்காக குவைத் செஞ்சிலுவை அமைப்பு வழங்கிய நன்கொடைகளுக்காக குவைத் அமீருக்கான இலங்கை அரசாங்கத்தின் பாராட்டுக்களையும் அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மற்றும் ஏனைய பல்தரப்பட்ட மன்றங்களில் குவைத் அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய மதிப்புமிக்க ஆதரவையும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை எரிசக்தி, ஹோட்டல், சுற்றுலா மற்றும் நகர்ப்புற வீட்டுத் திட்டங்கள் போன்ற பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கிடையேயான கூட்டாண்மை மூலம் மேலும் விரிவுபடுத்துவது குறித்து வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் மற்றும் தூதுவர் ஆகிய இருவரும் கலந்துரையாடினர்.

சுற்றுலா, சுகாதாரம் மற்றும் எரிசக்தித் துறைகள் போன்ற இருதரப்பு ஒத்துழைப்பின் புதிய பகுதிகள் இன்னும் ஆராயப்படாமல் உள்ளதாகவும், அவை இரு நாடுகளுக்கிடையே ஏற்கனவே இருக்கும் நல்லுறவு உறவுகளை வலுப்படுத்துவதில் பரஸ்பர நன்மை பயக்கும் என்றும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டினர்.

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...