follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுமருந்து தட்டுப்பாடு : அவசர சத்திரசிகிச்சைகளை மாத்திரம்  முன்னெடுக்க தீர்மானம்

மருந்து தட்டுப்பாடு : அவசர சத்திரசிகிச்சைகளை மாத்திரம்  முன்னெடுக்க தீர்மானம்

Published on

நாடுபூராகவும் உள்ள தனியார் வைத்தியசாலைகளில் பாரிய மருந்து தட்டுப்பாடு காணப்படுவதால், அவசர சத்திரசிகிச்சைகளை மாத்திரம்  முன்னெடுக்க  தனியார் வைத்தியசாலை மற்றும் நேர்சிங் ஹோம் சங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய நாடுபூராகவுமுள்ள 200 தனியார் வைத்தியசாலைகளில் 76 வகையான மருந்துகளுக்கு தட்டுபாடு காணப்படுவதாகவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.

மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்கள் தட்டுபாடு குறித்து சுகாதார அமைச்சு மற்றும் தனியார் சுகாதார சேவை ஒழுங்குப்படுத்தும் சபைக்கு அறிவித்துள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் கலாநிதி ஆனந்த குருப்பு ஆராச்சி அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

எனவே நாளுக்கு நாள் நாட்டில் அதிகரித்துச் செல்லும் மருந்துகளுக்கான பற்றாக்குறை காரணமாக அப்பாவி மக்களின் உயிர்கள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.

எனவே மருந்துகளையம் வைத்திய உபகரணங்களையும் இலங்கைக்க நன்கொடையாக வழங்குமாறு வெளிநாடுகளிலுள்ள இலங்கையரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்கும் நடவடிக்கையுடன், விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட...

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் என்பதை ஏற்கனவே அறிந்தேன் – ஜனாதிபதி

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என்பதை ஏற்கனவே அறிந்திருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவிடம்...

இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 2 வது அரையிறுதிப் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில்...