ஹங்வெல்ல (Hanwella) உள்ளிட்ட பல பிரதேசங்களில் நாளை காலை 8 மணி முதல் 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
லபுகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் நிலத்தடி நீர் தாங்கி சுத்தப்படுத்தப்படுவதால் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இதன்படி, ஹங்வெல்ல (Hanwella), கஹாஹேன (Kahahena) , ஜல்தர-ரணால (Jalthara -Ranala) ,கடுவெல (Kaduwela), மாபிடிகம(Mapitigama) மற்றும் தொம்பே (Dompe) ஆகிய பகுதிகளுக்கு நள்ளிரவு 12 மணி வரை நீர் விநியோகம் தடைப்படவுள்ளது