follow the truth

follow the truth

May, 26, 2025
Homeஉள்நாடுஇலங்கை அரசாங்கம் சாதிக்காததை நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் சாதித்துள்ளது!

இலங்கை அரசாங்கம் சாதிக்காததை நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் சாதித்துள்ளது!

Published on

இலங்கை அரசாங்கம் 13வருடங்களாக சாதிக்காததை நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் சாதித்துள்ளது எனது தந்தையின் படுகொலைக்கு நீதியை பெற்றுத்தந்துள்ளது என படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் லசந்தவிக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா விக்கிரமதுங்க தெரிவித்துள்ளார்.

ஹேக்கின் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் நேற்று இலங்கை அரசாங்கம் எனது தந்தையின் படுகொலையில் குற்றவாளி என்பதை கண்டறிந்துள்ளது என டுவிட்டர் பதிவில் அகிம்சா விக்கிரமதுங்க தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை அரசாங்கம் 13 வருடங்களாக செய்யதவறியதை நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் செய்துள்ளது – எனது தந்தையின் கொலைக்கு நீதியை வழங்கியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள், தீர்ப்பாயத்திற்கும் பீரிபிரஸ் பத்திரிகையாளகளை பாதுகாப்பதற்கான குழு எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் ஆகியவற்றிற்கு அவர்களின் கடுமையான பணி இந்த திட்டத்திற்கு உயிர்கொடுப்பதற்கான அவர்களின் நடவடிக்கைகள் ஆகியவற்றிற்காக எங்கள் குடும்பத்தின் நன்றியை தெரிவிப்பதாக அவர் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்றத்தில் சைகைமொழி உரைபெயர்ப்பு வசதியை விஸ்தரிக்க நடவடிக்கை

இலங்கை பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் மற்றும் பணியாட் தொகுதியினருக்கான வழக்கு நடவடிக்கைகள் மற்றும் சட்ட ஆலோசனைகள் குறிப்பிடத்தக்களவு அதிகரித்திருப்பதால் இதற்குத்...

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் உட்பட...

ஹஜ் பெருநாளை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை

புனித ஹஜ்ஜுப்பெருநாளை முன்னிட்டு எதிர்வரும் 06 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மற்றும் 09 ஆம் திகதி திங்கட்கிழமை ஆகிய...