follow the truth

follow the truth

May, 26, 2025
Homeஉள்நாடுஅழகுசாதன இறக்குமதி தடையை நீக்க வேண்டும்!

அழகுசாதன இறக்குமதி தடையை நீக்க வேண்டும்!

Published on

அழகுசாதனப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிகத் தடையை நீக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் ஒப்பனை தொழில்துறை சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை சுங்கத் தரவுகளின்படி அழகுசாதனப் பொருட்களின் இறக்குமதிக்கான செலவு 2021 மற்றும் 2022 ஆகிய இரண்டிற்கும் (1 ஜனவரி 2021 – 31 ஜூலை 2022) மொத்த இறக்குமதி கட்டணத்தில் 0.1% ஐ விட அதிகமாக இல்லை என குறித்த சம்மேளனம் தெரிவித்துள்ளது

ஒப்பனைப் பொருட்களின் இறக்குமதிக்கான தற்காலிகத் தடையானது, நாட்டிற்கு அன்னியச் செலாவணியை உருவாக்கக்கூடிய பல அழகுசாதனப் பொருட்கள் தொடர்பான தொழில்களையும் கடுமையாகப் பாதித்துள்ளதாக ஒப்பனை தொழில்துறை சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்மூலம், எதிர்வரும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை காலங்களை கருத்தில் கொண்டு தற்காலிக தடையை நீக்குவது குறித்து பரிசீலிக்குமாறு ஒப்பனை தொழில்துறை சம்மேளனம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

No description available.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்றத்தில் சைகைமொழி உரைபெயர்ப்பு வசதியை விஸ்தரிக்க நடவடிக்கை

இலங்கை பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் மற்றும் பணியாட் தொகுதியினருக்கான வழக்கு நடவடிக்கைகள் மற்றும் சட்ட ஆலோசனைகள் குறிப்பிடத்தக்களவு அதிகரித்திருப்பதால் இதற்குத்...

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் உட்பட...

ஹஜ் பெருநாளை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை

புனித ஹஜ்ஜுப்பெருநாளை முன்னிட்டு எதிர்வரும் 06 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மற்றும் 09 ஆம் திகதி திங்கட்கிழமை ஆகிய...