follow the truth

follow the truth

May, 26, 2025
Homeஉள்நாடுஇலங்கைக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும்!

இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும்!

Published on

இலங்கையின் ஆரம்பகால பொருளாதார மீட்சி மற்றும் வளர்ச்சிக்காக இலங்கையின் முக்கிய பொருளாதார துறைகளில் நீண்டகால முதலீடுகளை ஊக்குவித்தல் உட்பட சாத்தியமான அனைத்து வழிகளிலும் இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர் இன்று தெரிவித்துள்ளார்.

உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில்,

இலங்கை மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களைக் குறைப்பதற்காக இந்தியா முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு 4 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இருதரப்பு உதவிகளை வழங்கியுள்ளது என்பதை நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார சிக்கல்களில் விரைவாக ஆதரவளிக்கும் மற்ற இருதரப்பு மற்றும் பலதரப்பு பங்காளிகளுக்கும் இந்தியா பரிந்துரைத்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்திற்கும் (IMF) இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான பணியாளர் மட்ட உடன்படிக்கையின் முடிவையும் நாங்கள் கவனித்துள்ளோம். சர்வதேச நாணய நிதியத்திற்குள்ளான அதன் மேலதிக அங்கீகாரம் இலங்கையின் கடன் நிலைத்தன்மையின் மீது தொடர்ச்சியாக உள்ளது.

இலங்கையின் ஆரம்பகால பொருளாதார மீட்சி மற்றும் வளர்ச்சிக்காக இலங்கையின் முக்கிய பொருளாதார துறைகளில் இந்தியாவிடமிருந்து நீண்ட கால முதலீடுகளை ஊக்குவிப்பதன் மூலம், சாத்தியமான அனைத்து வழிகளிலும் இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவாக இருக்கும் என்று இந்தியா மீண்டும் வலியுறுத்தியது.

கூடுதலாக, இலங்கையில் இந்தியாவின் இருதரப்பு அபிவிருத்தி ஒத்துழைப்புத் திட்டங்கள், ஒட்டுமொத்தமாக சுமார் 3.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இலங்கையர்களும் உயர்கல்வி மற்றும் திறன் பயிற்சிக்கான புலமைப்பரிசில்களை முதன்மை இந்திய நிறுவனங்களில் தொடர்ந்து பெற்று வருகின்றனர்.

இலங்கையுடனான எமது நெருக்கமான மற்றும் நீண்டகால ஒத்துழைப்பின் இந்த அம்சங்களும் இலங்கையின் தற்போதைய பொருளாதார சிரமங்களை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகளுக்கு பங்களிக்கின்றன என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்றத்தில் சைகைமொழி உரைபெயர்ப்பு வசதியை விஸ்தரிக்க நடவடிக்கை

இலங்கை பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் மற்றும் பணியாட் தொகுதியினருக்கான வழக்கு நடவடிக்கைகள் மற்றும் சட்ட ஆலோசனைகள் குறிப்பிடத்தக்களவு அதிகரித்திருப்பதால் இதற்குத்...

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் உட்பட...

ஹஜ் பெருநாளை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை

புனித ஹஜ்ஜுப்பெருநாளை முன்னிட்டு எதிர்வரும் 06 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மற்றும் 09 ஆம் திகதி திங்கட்கிழமை ஆகிய...