follow the truth

follow the truth

May, 25, 2025
Homeஉள்நாடுதலைக்கவசத்தால் இராஜாங்க அமைச்சரை தாக்கிய நபர்கள்! விசாரணை ஆரம்பம்

தலைக்கவசத்தால் இராஜாங்க அமைச்சரை தாக்கிய நபர்கள்! விசாரணை ஆரம்பம்

Published on

ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க மீது மோட்டார் சைக்கிள் தலைக்கவசம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

திங்கட்கிழமை மாலை பதுளை பண்டாரநாயக்க மாவத்தையில் வைத்து ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் இருவரால் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதுளையில் உள்ள உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் ஒருவருக்கு சொந்தமான கடைக்கு அருகில் அமைச்சர் தனது காரை நிறுத்தி உரையாடலில் ஈடுபட்டதை அடுத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

மதுபோதையில் இருவர் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், மோட்டார் சைக்கிளில் வந்த தலைக்கவசத்தால் அவரை தாக்கியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பதுளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்றத்தில் சைகைமொழி உரைபெயர்ப்பு வசதியை விஸ்தரிக்க நடவடிக்கை

இலங்கை பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் மற்றும் பணியாட் தொகுதியினருக்கான வழக்கு நடவடிக்கைகள் மற்றும் சட்ட ஆலோசனைகள் குறிப்பிடத்தக்களவு அதிகரித்திருப்பதால் இதற்குத்...

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் உட்பட...

ஹஜ் பெருநாளை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை

புனித ஹஜ்ஜுப்பெருநாளை முன்னிட்டு எதிர்வரும் 06 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மற்றும் 09 ஆம் திகதி திங்கட்கிழமை ஆகிய...