follow the truth

follow the truth

May, 25, 2025
Homeஉள்நாடுஆயிரம் ரூபா சம்பளம் வேண்டும் என கோரி மஸ்கெலியா பிரவுன்ஸ்வீக் தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஆயிரம் ரூபா சம்பளம் வேண்டும் என கோரி மஸ்கெலியா பிரவுன்ஸ்வீக் தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published on

மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான மஸ்கெலியா பிரவுன்ஸ்வீக் தோட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட நாளாந்த சம்பளம் 1000 ரூபாயை உடனடியாக வழங்குமாறு கோரி இன்று தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக எதிர்ப்பு கோஸங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரவுன்ஸ்வீக் தேயிலைத் தோட்டங்களின் 07 பிரிவுகளைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் கட்சி பேதமின்றி இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

இலங்கையில் 22 தோட்டக் கம்பனிகள் உள்ளதாகவும், அதில் மஸ்கெலியா பெருந்தோட்டக் கம்பனி மாத்திரம் ரூ.1000 கொடுப்பதில்லை எனவும் தெரிவித்தனர். அத்தோடு, நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மீறி தற்போது பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் தோட்டத் தொழிலாளர்களை மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனம் பாதாளத்திற்கு தள்ளியுள்ளது.

01 கிலோகிராம் மாவின் தற்போதைய விலை ரூபா 400/- எனவும், மூன்று வேளை மாவு உணவை உண்ணும் தோட்டத் தொழிலாளர்கள் எவ்வாறு 200/- முதல் 300/- வரை சம்பளம் பெற்று வாழ்வார்கள் எனவும் தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

தோட்ட உரிமையாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட 1000 ரூபாவை மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனிக்கு மாத்திரம் வழங்க முடியாவிட்டால் வேறு நிறுவனத்திடம் வழங்குமாறு கோரிக்கை விடுப்பதாகவும் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தை தொடரவுள்ளதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

இந்தப் போராட்டத்தில் சுமார் 400ற்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் கலந்துகொண்டதுடன், போராட்டத்தின் பின்னர் தோட்டத் தொழிலாளர்கள் வழமை போன்று தமது அன்றாட சேவைகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்றத்தில் சைகைமொழி உரைபெயர்ப்பு வசதியை விஸ்தரிக்க நடவடிக்கை

இலங்கை பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் மற்றும் பணியாட் தொகுதியினருக்கான வழக்கு நடவடிக்கைகள் மற்றும் சட்ட ஆலோசனைகள் குறிப்பிடத்தக்களவு அதிகரித்திருப்பதால் இதற்குத்...

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் உட்பட...

ஹஜ் பெருநாளை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை

புனித ஹஜ்ஜுப்பெருநாளை முன்னிட்டு எதிர்வரும் 06 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மற்றும் 09 ஆம் திகதி திங்கட்கிழமை ஆகிய...